skip to Main Content

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 வது வருட நிறைவு விழா

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 வது வருட நிறைவு விழாவினை வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் இராமகிருஸ்ண மிஷன் ஆகியன இணைந்து 22.01.2022 அன்று வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தில் நடாத்தியிருந்தனர்.

நிகழ்வானது சங்கத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சுவாமி ஹரிவ்ரதானந்த மஹராஜ் ( இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலய, கோயம்முத்தூர், தமிழ்நாடு, இந்தியா), சுவாமி அஷ்ராத்மானந்த மஹராஜ் ( தலைவர், இராமகிருஸ்ண மிஷன், கொழும்பு), கலாநிதி.த.மங்களேஸ்வரன் (உப பீடாதிபதி வவுனியாப் பல்கலைக்கழகம்) மற்றும் வைத்தியர் ப.சத்தியநாதன் (தலைவர், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்- வவுனியா) ஆகியோரினால் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து; விருந்தினர்களால் மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

இந் நிகழ்வில் சங்க பாலர் பாடசாலையின் பழைய மாணவிகளின் வரவேற்பு நடனமும், சங்கத்தின் தலைவரின் வரவேற்புரை,; தலைமையுiர், பாலர் பாடசாலை மாணவியின் உரை, சுவாமி அ~ராத்மானந்த மஹராஜ் அவர்களின் உரை என்பன இடம்பெற்றதுடன் சுவாமி ஹரிவ்ரதானந்த மஹராஜ் அவர்களின் கதாப்பிரசங்கமும், சிதம்பரேஸ்வரர நடனாலய மாணவிகளின் நடனம் மற்றும் தமிழ் மணி அகளங்கன் அவர்களின் உரையும் இடம்பெற்றது.

 

                                

                                                                                                                          

Back To Top