skip to Main Content

கோவிட் – 19 கால உதவிகள்

கொவிட் -19 பெருந் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டத்ததைச் சேர்ந்த 60 குடும்பங்களுக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் உலருணவுப் பொதிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் மாற்று திறனாளி உள்ள குடும்பம், பெண் தலைமை தாங்கும் குடும்பம், உறவினர்களின் பராமரிபில் உள்ள சிறுவர்களைக் கொண்ட குடும்பம், தாய் அல்லது தந்தையை இழந்த பிள்ளைகளைக் கொண்ட குடும்பம், வயது முதிர்ந்த மதகுருமார்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இதற்கான நிதியுதவியினை நயினை அமரர் சதாசிவம் கணேஸ்வரன் (ஓய்வு பெற்ற அதிபர், புங்குடுதீவு மகாவித்தியாலயம்) அவர்களின் 7ம் ஆண்டு நினைவாக அவரது மருமகன் திரு.மா.பரணீதரன் அவர்கள் ரூபா 50,000.00 ம், திரு. காளிமுத்து திருக்குமார் அவர்கள் தனது பிறந்த நாளினை முன்னிட்டு ரூபா 35,000.00 ம், திரு. தேவராசா அமலன் 12,000.00 ம் வழங்கியிருந்தனர்.

இவ் செயற்பாட்டிற்கு நிதியுதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கும், பொருட்களை பொதி செய்து வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் சங்கத்தின் நன்றிகள்.

Back To Top