தை பொங்கல் -2024
சங்கத்தின் தை பொங்கல் நிகழ்வானது 15.01.2024 காலை சங்க முன்றலில் நடைபெற்றது.
சங்கத்தின் தை பொங்கல் நிகழ்வானது 15.01.2024 காலை சங்க முன்றலில் நடைபெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் அதன் அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைப் பயிற்சி மாணவர்கள் ஆகியோர்களால் திருநாவுகரச நாயனார் குருபூசையினை இன்று சங்க நடராஜர் மண்டபத்தில் அனுஸ்டித்ததுடன், தண்ணீர்பந்தலும் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் 70 ஆண்டுகள் நிறைவு விழா 03.12.2022 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு சங்கத்தின் தலைவர் மருத்துவர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் கந்தசுவாமி கோயிலில் இருந்து சமய,கலாசார ஊர்லத்துடன் ஆரம்பமாகியது. இவ் ஊர்வலத்தில் விருந்தினர்கள் மற்றும் பாலர் பாடசாலை சிறார்கள், சமய பெரியார்கள் மற்றும் இந்துமத கடவுள்களின் வேடம் தரித்து அணிவகுத்தனர்…
சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 வது வருட நிறைவு விழாவினை வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் இராமகிருஸ்ண மிஷன் ஆகியன இணைந்து 22.01.2022 அன்று வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தில் நடாத்தியிருந்தனர். நிகழ்வானது சங்கத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சுவாமி ஹரிவ்ரதானந்த மஹராஜ்…
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி பூசைகள் 2021 ஒக்ரோபர் மாதம் 07ம் திகதி கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 15.10.2021 விஜயதசமியன்று ஏடு தொடக்கலுடன் நிறைவுபெற்றது. கொவிட் -19 பெரும் தொற்று காரணமாகவும் சுகாதார முறைகளை பின்பற்றியும்இ மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனும் எளிமையாக அனுஸ்டிக்கப்பட்டது. இவ் பூசை வழிபாடுகளுக்கு திரு திருமதி கனகேஸ்வரன் ஆசிரியர்களின் கானாமிருத காலாயம்இ…
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா பெரும் தொற்றில் இருந்து அனைத்து மக்களும் விடுபட்டு நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ இன்றய தினம் (08.05.2021) சங்க நடராஜர் மண்டபத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 2021 ம் ஆண்டிற்கான பொங்கல் விழா இன்று (09.02.2021) சங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியைகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கு கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். முன்பள்ளி சிறுவர்களுக்கு இந்து சமய விழாக்களை அறிந்து கொள்ள இவ்வாறான நிகழ்வுகள் உதவும். …
நவராத்திரி விழாவின் 9 நாள் நிகழ்வும் ஏடுதொடக்குதலும் இன்று (25.10.2020) சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வை சங்க பாலர் பாடசாலையும் சங்க நிர்வாகமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தனர்.
நவராத்திரி விழாவின் 8 ம் நாள் (24.10.202) நிகழ்வுகள்- உபயம் மா.கதிர்காமராஜா.
நவராத்திரி விழாவின் 7 ம் நாள் (23.10.202) நிகழ்வுகள்- உபயம் தே.அமலன், உரிமையாளர் சுத்தானந்த விலாஸ்.