அறநெறி பாடசாலை ஆசிரியர் செயலமர்வு
வவுனியாவில் இயங்கும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களில் ஒரு தொகுதியினருக்கான செயலமர்வினை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் இன்று நடாத்தியது. இவ்வமர்வில் 38 அறநெறி ஆசிரியர்கள் பங்குபற்றினர். வளவாளர்களாக திரு.சுவர்ணராஜா (சங்க காப்பாளரும், ஓய்வுநிலை பீடாதிபதியும்- வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி), திரு.த.தர்மேந்திரா,(உதவி பிரதேச செயலாளர், வெங்கல செட்டிகுள பிரதேச செயலகம்), திரு.சி.கஜேந்திரகுமார் (இந்து கலாசார உத்தியோகஸ்தர் வெங்கல செட்டிகுள பிரதேச செயலகம்), திரு.ச.பஞ்சாட்சரசர்மா (அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வெங்கல செட்டிகுள பிரதேச செயலகம்) ஆகியோர் கருத்தாடல்களை மேற்கொண்டனர்.