அறநெறி பாடசாலை ஆசிரியர் செயலமர்வு
வவுனியாவில் இயங்கும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களில் ஒரு தொகுதியினருக்கான செயலமர்வினை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் இன்று நடாத்தியது. இவ்வமர்வில் 38 அறநெறி ஆசிரியர்கள் பங்குபற்றினர். வளவாளர்களாக திரு.சுவர்ணராஜா (சங்க காப்பாளரும், ஓய்வுநிலை பீடாதிபதியும்- வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி), திரு.த.தர்மேந்திரா,(உதவி பிரதேச செயலாளர், வெங்கல செட்டிகுள பிரதேச செயலகம்), திரு.சி.கஜேந்திரகுமார் (இந்து கலாசார உத்தியோகஸ்தர்…
நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள்.
நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள். க.மு.சுதர்சனின் (சுதன் அச்சகம்) உபயத்துடனும், ஏழிசை மிருதங்க நடனாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளுடனும், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.
நவராத்திரி விழாவின் 4 ஆம் நாள்.
நவராத்திரி விழாவின் 4 ஆம் நாள். நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகளும், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.
நவராத்திரி விழா 2 ஆம் நாள்.
திரு.திருமதி கனகேஸ்வரன் ஆசிரியர்களின் கானாமிருத கலாலய மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள நடைபெற்றன.
நவராத்திரி விழா
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நவராத்திரி விழா இன்று கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகியது. இன்றைய நிகழ்வில் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவியின் நடனம் மற்றும் பாலர் பாடசாலை மாணவியின் உரையும் இடம்பெற்றது.
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க அறநெறி மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை அனுஷ்டிக்கப்பெற்றது. சுந்தரர் தேவாரம், அவரின் வரலாறு, நடனம் போன்ற நிகழ்வுகளை மாணவர்கள் வழங்கினர். நிகழ்வுகளை வழங்கியவர்களை வாழ்த்தி பரிசில்களும் வழங்கி வைக்கப்பெற்றன.
ஆடிப்பிறப்பு
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வு. பாலர் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.
மாணிக்கவாசக நாயனர் குருபூசை
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் மாணிக்கவாசக நாயனர் குருபூசை . (ஆனி மகம்) பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடனும் சங்க உறுப்பினர்களுடனும் அனுஸ்டிக்கப்பெற்றது.
திருஞானசம்பந்தர் குருபூசை
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க அறநெறி பாடசாலை மாணவர்களின் பங்கு பற்றலுடன் இன்று (25.05.2024) நடைபெற்ற திருஞானசம்பந்தர் குருபூசை. இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை யோகிக் இன்சயிட்ஸ் அறகட்டளையின் உறுப்பினர்கள்,சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் அறநெறி மாணவர்களால் உரைகள், திருஞான சம்பந்தர் திருமுறைகள் பாடப்பெற்றும் அனுஸ்டிக்கப்பெற்றது. …