திருமுறை வகுப்புக்கள்.
திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன அனைத்துலக பன்னிரு திருமுறை ஆராய்சி நிறுவனம் நடாத்தும் திருமுறை வகுப்புக்கள். வவுனியா மாவட்டத்திற்கான திருமுறை வகுப்புக்கள் இன்றைய தினம் (o1.03.2025) சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் ஆதரவுடன் இலங்கை தருமையாதீன பண்ணிசை வகுப்பினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏடு தொடக்கல்
தைப் பூச நன்நாளில் சங்கத்தில் நடைபெற்ற ஏடு தொடக்கல் மற்றும் நாள் வகுப்புக்கள்
திருவாசகம் முற்றோதல்
திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சங்கத்தில் இன்று நடைபெற்றது.இந் நிகழ்வில் பங்கு கொண்ட அடியவர்களுக்கு திருவாசக புத்தகமும் வழங்கப்பட்டது.
நவராத்திரி போட்டிகள் -2025
நவராத்திரியை முன்னிட்டு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கிடையில் மாலை கட்டுதல், பூ கோரத்தல், கோலம் போடுதல், தோரணம் பின்னுதல், தேவாரம், ஆத்திசூடி, மற்றும் திருக்குறள் மனனம் செய்தல் போன்ற போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது.
நவராத்திரி விழா -2025
சங்கத்தின் நவராத்திரி விழா 22.09.2025 காலை கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 02.10.2025 விஜயதசமி அன்று ஏடு தொடக்கலுடன் நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாள் மாலையில் வவுனியாவில் இயங்கி வரும் 9 கலையகங்களின் கலை நிகழ்வுகளும்; நடைபெற்றதுடன் நிகழ்வுகளுக்கு கானாமிருத கலாலயம், நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி, அமுதேஸ்வரா சைவ உணவகம், திரு.க.மு.சுதர்சன், சிதம்பரேஸ்வரம் நடனாலயம், வாத்திய கலாலயம்,…
சிவனடியார்களின் இலங்கைக்கான ஆன்மீக பயணம்
உலக சிவனடியார்களின் இலங்கைக்கான சிவாலய ஆன்மீக பயணம்* இந்தியாவில் இருந்து 180 சிவனடியார்கள் முதல் முதலாக ஒரே தடவையில் சிவபூமி என அழைக்கப்படும் இலங்கை திருநாட்டில் உள்ள ஆலயங்களை தரிசிக்க வருகை தந்தனர். இன்று திருகேதீஸ்வரத்திலிருந்து மட்டகளப்பிற்கு செல்லும் வழியில் இவர்களை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் வரவேற்று காலை உணவு வழங்கி உபசரித்தனர். இவர்களுக்கான…
