சுவாமி விவேகானந்தர் ஜனன தினம்
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் வவுனியா மாநகர சபையும் இணைந்து சுவாமி விவேகானந்தர் ஜனன தினத்தினை புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில் நினைவு கூர்ந்தனர். இந் நிகழ்வில் சங்க அறநெறி பாடசாலை மாணர்கள் விவேகானந்தர் வேடம் தாங்கி உரையாற்றியதுடன், தமிழ்மணி அகளங்கன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றன. உரையாற்றிய சிறுவர்களுக்கு பரிசில்கள்…
புத்தகங்கள் வழங்கல்
கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் ஊடாக ஜெயா புத்தக நிலையத்தினர் பெருமளவிலான ஆங்கில மொழிமூல புத்தகங்களை சங்கத்திற்கு வழங்கியுள்ளனர். இவற்றினை தரம் பிரித்து நூலகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் வழங்கும் நிகழ்வில் முதல் தொகுதியை புதுக்குளம் மகாவித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, முஸ்லீம் மகாவித்தியாலயம், , காமினி மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும், எழுச்சியின் கரங்கள் நூல்நிலையத்திற்கும் வழங்கிவைக்கப்பட்டது. இவற்றினை…
திருவாசகம் முற்றோதல்
திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சங்கத்தில் இன்று நடைபெற்றது.இந் நிகழ்வில் பங்கு கொண்ட அடியவர்களுக்கு திருவாசக புத்தகமும் வழங்கப்பட்டது.
பேரிடர் கால பணிகள்.
சங்கத்தினால் 200 மதிய உணவு பிரதேச செயலகத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது. இடம் பெயர்ந்த 5 பேருக்கு தங்குமிடம், 2 நாளுக்கான உணவும், பயணிக்க முடியாத 11 பேருக்கு ஒரு நாளுக்கான தங்குமிடம், 2 நேர உணவும் வழங்கப்பட்டதுடன், வவுனிய தமிழ் மத்திய மகாவித்தியாலம், 1984 ஆம் ஆண்டு பெறியியலாளர்கள் (பேராதெனிய பல்கலைக்கழகம்), வவுனியா சுயாதீன இளைஞர்கள் மற்றும்…
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள்
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் அதே நேரத்தில் நினைவு கூரும் நிகழ்வு இன்று 19.11.2025 காலை 07.30 மணிக்கு சங்கத்தினை ஆரம்பித்து வைத்த சுவாமி சுத்தானந்த பாரதியாரின் திருவுருவச் சிலையடியில் விளக்கேற்றியும் தீபாராதனை செய்தும் மாலை அணிவித்தும் நினைவுகூரப்பட்டது. 74 வது ஆண்டில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்.
பாலர் பாடசாலையின் ஆசிரியர் தினம் -2025
சுத்தானந்த இந்து இஞைர் சங்க பாலர் பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக இன்று ஆட்சி மன்றம் மற்றும் மாணவர்களினால் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் சங்க முன்பள்ளி ஆசிரியர்களின் ஆக்கங்களை தாங்கிய முதற்படி எனும் நூலும் வெளியிடப்பட்டது.
நவராத்திரி போட்டிகள் -2025
நவராத்திரியை முன்னிட்டு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கிடையில் மாலை கட்டுதல், பூ கோரத்தல், கோலம் போடுதல், தோரணம் பின்னுதல், தேவாரம், ஆத்திசூடி, மற்றும் திருக்குறள் மனனம் செய்தல் போன்ற போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது.
நவராத்திரி விழா -2025
சங்கத்தின் நவராத்திரி விழா 22.09.2025 காலை கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 02.10.2025 விஜயதசமி அன்று ஏடு தொடக்கலுடன் நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாள் மாலையில் வவுனியாவில் இயங்கி வரும் 9 கலையகங்களின் கலை நிகழ்வுகளும்; நடைபெற்றதுடன் நிகழ்வுகளுக்கு கானாமிருத கலாலயம், நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி, அமுதேஸ்வரா சைவ உணவகம், திரு.க.மு.சுதர்சன், சிதம்பரேஸ்வரம் நடனாலயம், வாத்திய கலாலயம்,…
