தாகசாந்தி நிலையம்
வவுனியா அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் அமைக்கப்பட்ட தாகசாந்தி நிலையம்.
வவுனியா அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் அமைக்கப்பட்ட தாகசாந்தி நிலையம்.
சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவு தினம் இன்று (12.01.2024) அவரது திருவுருவச் சிலையடியில் நினைவு கூரப்பெற்றது. இந்த நிகழ்வில் விவேகானந்தரைப் பற்றி அய்ஸ்ணவி நிருஷன், பாணுஜா பாலேந்திரன்,கோபிகா தர்மலிங்கம் ஆகிய மாணவிகள் மற்றும் தமிழ் மணி அகளங்கன் அவர்களும் சிறப்புரை யாற்றினர். இந் நிகழ்வை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கமும் வவுனியா நகரசபையும் இணைந்து ஏற்ப்பாடு…
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் கண்காட்சி 24.09.2023
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் 28 வது விளையாட்டு விழா 23.07.2023 அன்று சங்கத்தின் தலைவர் மருத்துவர்.ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி.ம.சபர்ஜா- உதவி மாவட்ட செயலாளர்,வவுனியா, அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.த.தவேந்திரலிங்கம் - உதவி கல்விப் பணிப்பாளர், ஆரம்ப பிரிவு, வவுனியா தெற்கு கல்வி…
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் அதன் அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைப் பயிற்சி மாணவர்கள் ஆகியோர்களால் திருநாவுகரச நாயனார் குருபூசையினை இன்று சங்க நடராஜர் மண்டபத்தில் அனுஸ்டித்ததுடன், தண்ணீர்பந்தலும் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் 70 ஆண்டுகள் நிறைவு விழா 03.12.2022 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு சங்கத்தின் தலைவர் மருத்துவர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் கந்தசுவாமி கோயிலில் இருந்து சமய,கலாசார ஊர்லத்துடன் ஆரம்பமாகியது. இவ் ஊர்வலத்தில் விருந்தினர்கள் மற்றும் பாலர் பாடசாலை சிறார்கள், சமய பெரியார்கள் மற்றும் இந்துமத கடவுள்களின் வேடம் தரித்து அணிவகுத்தனர்…
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் 27 ஆவது கலைவிழா 26.03.2022 அன்று சங்கத்தின் கௌரவ தலைவர் வைத்தியர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக, வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. அன்னமலர் சுரேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக, வவுனியா தெற்கு கல்வி வலைய முன்பள்ளி…
சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 வது வருட நிறைவு விழாவினை வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் இராமகிருஸ்ண மிஷன் ஆகியன இணைந்து 22.01.2022 அன்று வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தில் நடாத்தியிருந்தனர். நிகழ்வானது சங்கத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சுவாமி ஹரிவ்ரதானந்த மஹராஜ்…
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கமும் வவுனியா நகரசபையும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் ஜனன தின நிகழ்வினை சங்கத்தின் வட மேற்கு மூலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையடியில் ஏற்ப்பாடு செய்திருந்தனர். சங்கத்தின் தலைவர் மருத்துவர் ப.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் அவரது திருவுருவச் சிலைக்கு மாலையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து…
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி பூசைகள் 2021 ஒக்ரோபர் மாதம் 07ம் திகதி கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 15.10.2021 விஜயதசமியன்று ஏடு தொடக்கலுடன் நிறைவுபெற்றது. கொவிட் -19 பெரும் தொற்று காரணமாகவும் சுகாதார முறைகளை பின்பற்றியும்இ மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனும் எளிமையாக அனுஸ்டிக்கப்பட்டது. இவ் பூசை வழிபாடுகளுக்கு திரு திருமதி கனகேஸ்வரன் ஆசிரியர்களின் கானாமிருத காலாயம்இ…